தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்றங்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில வழக்குகளின் விசாரணை முன்கூட்டியே நடத்தப்படும். சில வழக்குகள் தேர்தலுக்குப் பின்விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. குறிப்பாக கோடநாடு வழக்கு ஏப்ரல் 22, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஏப்ரல் 25ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.