“மு.க.ஸ்டாலின் எனது மூத்த சகோதரர்” என்று ராகுல்காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைப்பாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்த அவர், திருநெல்வேலியில் காலை பிரச்சாரத்தை முடித்துவிட்டு, நேற்று மாலை கோயம்புத்தூருக்கு வருகை தந்தார். பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர். வேறு எந்த தலைவரையும் நான் அண்ணன் என அழைத்தது இல்லை” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.