இன்றைய காலகட்டத்தில் பலரும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக தங்களுக்கு தேவையான விஷயங்களை தேடி கொள்கிறார்கள். அந்தவகையில் பேஸ்புக்கில் கடந்த ஆண்டு ‘ரஷ்யாவில் செக்யூரிட்டி வேலை வாய்ப்பு’ என்ற விளம்பரம் வந்துள்ளது. இதை பார்த்த கேரளாவைச் சேர்ந்த டேவிட் என்ற இளைஞர் அப்பணிக்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்திய மதிப்பில் மாதம் ரூ.1.82 லட்சம் சம்பளம் தருவதாக அழைத்துச் சென்ற அவர்கள், கிழக்கு உக்ரைன் பகுதியில் போர்முனையில் சண்டையிட வைத்துள்ளனர். பல சோதனைகளை கடந்து அந்த இளைஞர் இந்தியா வந்து சேர்ந்துள்ளார்.