கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4. பேர் உயிரிழந்துள்ளனர்; 5க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும், பலத்த காயத்துடன் 80க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.