நடிகர் விஜய் நேற்று முன்தினம் தன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு நன்கொடை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. இந்நிலையில் விஜய் பேசியபோது, சில கருத்துகள் அரசியல் ரீதியாக இருந்தது.

இது தளபதி விஜய் அரசியலில் என்ட்ரி கொடுப்பதற்கான அற்குறியாக இருக்குமோ என சந்தேகித்தனர். தற்போது இதுபற்றி சீமான் கூறியதாவது “விஜய் அரசியலுக்கு வர இருப்பதால் இது போன்ற காரியங்களை வெளிப்படையாக செய்வதாக தெரிவித்தார்.

மேலும் நடிகர் சிவகுமார் மற்றும் அவரது பிள்ளை சூர்யா என அவர்கள் குடும்பமே பல வருடங்களாக நல்ல விஷயங்களை செய்து வருவதாகவும், ஆனால் அவை எதுவுமே வெளியில் தெரியவில்லை எனவும் பேசினர். நடிப்பது மட்டுமே ஒரு அரசியல் கட்சிக்கு தலைவனாவதற்கான தகுதியாக ஆகிவிட முடியாது” என கூறி இருக்கிறார் சீமான்.