மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மூவேந்தர் புலிப்படை அமைப்பு மற்றும் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் நேற்று இரவு அறிவித்துள்ளது. இபிஎஸ்ஐ நேரில் சந்தித்து இரு அமைப்பின் தலைவர்களும் ஆதரவு கடிதத்தை அளித்தனர். தற்போது அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், புரட்சி பாரதம், SDPI, அகில இந்திய பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேமுதிகவும் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது.