வேல்ஸ் நாட்டில் மூன்று வயது சிறுமி கண்ணாடி துகள்கள் மற்றும் மர துண்டுகளை உணவாக சாப்பிடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிகா சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள வைண்டர் என்ற சிறுமி கடந்த சில மாதங்களாக கற்கள் மற்றும் பஞ்சு உள்ளிட்ட கையில் கிடைத்ததை எல்லாம் விழுங்கியுள்ளார். எந்தவிதமான ஊட்டச்சத்தும் இல்லாத உணவு அல்லாத பிற பொருள்களை சாப்பிடுவது தான் இந்த நோய் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.