நெல்லை மக்களவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை மற்றும் ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் திமுக கூட்டணியில் 2004, 2009 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற காங்கிரஸ், 2014 ஆம் ஆண்டு தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தது. 2019 ஆம் ஆண்டு திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸ் களமிறங்குகிறது.