கிருஷ்ணகிரி மாவட்டம் சாந்தமலை கிராமத்தில் யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் மக்களுக்கு வனத்துறையினர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானை தாக்கி விவசாய உயிரிழந்த நிலையில் இரவில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் விவசாய நிலங்களுக்கு காவலுக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் அதிகாலையில் விவசாய நிலங்களுக்கு செல்வோர் யானை நடமாட்டம் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். அதேசமயம் விரைவில் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.