சபரிமலை சன்னிதானத்துக்கு போகும் ஒரு சில பக்தர்கள் டிரம்ஸ் உள்ளிட்ட இசைக்கருவிகளுடன் அய்யப்ப கானம் பாடி சபரிமலைக்கு செல்வது வழக்கம் ஆகும். அத்துடன் சில பக்தர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களுடன் செல்கின்றனர். இந்நிலையில் சபரிமலை பக்தர் ஒருவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அவற்றில், இசைக்கருவி உள்ளிட்ட உபகரணங்களை சன்னிதானத்தில் வைத்து இசைக்க தடை விதிக்க கோரியும், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்களின் படங்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல தடைவிதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

அதன்பின் மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, சபரிமலை சன்னிதானத்தில் டிரம்ஸ் இசைக் கருவிகளை இசைக்க தடைவிதித்தது. அதுமட்டுமின்றி அரசியல், சினிமா பிரமுகர்களின் புகைப்படங்களை பக்தர்கள் சபரிமலைக்கு கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கக்கூடாது என தெரிவித்தது. இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.