தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து சபரிமலை நோக்கிப் பாதயாத்திரையாகச் சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது, திண்டுக்கல்லில் இருந்து சபரிமலை நோக்கிச் சென்ற வேன் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆண்டிபட்டி மேலத்தெருவைச் சேர்ந்த மாரிச்சாமி (55) என்ற குருசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர், புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் இரவு ஆண்டிபட்டியில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் நேற்று அதிகாலை சின்னமனூர் அருகே கோட்டூர் – சீலையம்பட்டி சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த ‘டெம்போ டிராவலர்’ வேன் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
#JUSTIN சபரிமலைக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது மோதிய வேன்
ஆண்டிபட்டியைச் சேர்ந்த
மாரிச்சாமி, ராம்கி ஆகியோர் உயிரிழப்பு; பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் #Theni #chinnamanur #RoadAccident #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/89HyEDsI6g— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 3, 2026
“>
இந்த விபத்தில் மாரிச்சாமி மற்றும் ராம்கி (36) ஆகிய இரு பக்தர்கள் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
‘அடக்கடவுளே இப்படியா நடக்கணும்..’ ஐயப்ப பக்தர்களுக்கு நிகழ்ந்த பயங்கரம்
சபரிமலை ஐயப்பன் கோவில் நோக்கி சென்ற பாதசாரி பக்தர் இருவர் மீது டெம்போ ட்ராவல் வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரி*ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது#Theni #AyyappanDevotees… pic.twitter.com/uS9NiS5bPW
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) January 3, 2026
“>
இது குறித்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சின்னமனூர் போலீசார் வேன் ஓட்டுநர் தினேஷ்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
