ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி நேற்று காளஹஸ்தி அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மாதந்தோறும் ஒன்றாம் தேதி தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை வழங்கி வந்தனர். ஆனால் சந்திரபாபு செய்த புகாரின் காரணமாக வீடுகளுக்கு சென்று உதவி தொகை வழங்குவது நிறுத்தப்பட்டது.

அதனால் முதியவர்கள் அலுவலகத்திற்குச் சென்று உதவித்தொகை பெற்று வந்தனர். இதில் வெயிலின் தாக்கம் காரணமாக இதுவரை 31 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணம் சந்திரபாபு நாயுடு தான். கொஞ்சம் விட்டால் சந்திரபாபு என்ற சந்திரமுகி உங்கள் ரத்தத்தை குடித்து விடும் என்ற விமர்சித்துள்ளார்.