சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைகளின் படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும் முழு உரிமை தன்னிடம் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, அனைவருக்கும் சமமான உரிமையை கொடுப்பது எங்களின் நோக்கம் ஆகும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைகளின் படி இருக்கைகள் வழங்கப்படும். மகளிர் காண உரிமை தொகை ஆயிரம் ரூபாய் மற்றும் தகுதி உள்ள நபர்களுக்கு இந்த ஆண்டு வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.