பிலிப்பைன்ஸ் நாட்டில் மாஸ்பேட் மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மாஸ்பேட் நகரில் மியாகா கிராமத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. குறிப்பாக பிலிப்பைன்ஸ் “ரிங் ஆப் பயர்” பகுதியில் அமைந்துள்ளதால் நிலநடுக்கங்கள் ஒரு தினசரி நிகழ்வாக உள்ளது.