அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  கூகுள் நிறுவனம், டெக்னாலஜி உலகின் ஜாம்பவானாக வலம் வருகிறது.  இந்த  நிறுவனமானது  1998ஆம் ஆண்டு இந்த தினத்தில் தான் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆட்ஸ்கேப், ஆண்ட்ராய்டு, எண்டாக்சன் யூடியூப், ஜிப்டாஷ் உள்ளிட்ட பல இயங்குதள சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனம் இன்று  தன்னுடைய  25ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. உலகின் தவிர்க்கமுடியாத உயரத்தில் கூகுள் நிறுவனம் தற்போது நிலைகொண்டுள்ளது. இதன் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளார். பிறந்தநாளை முன்னிட்டு இன்று கூகுள் தனது வலைதள முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டுள்ளது.