கோவையில் நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்..

கோவை  நீதிமன்றம் பின்புறம் நேற்று பட்டப்பகலில் கோகுல் மற்றும் மனோஜ் என்கிற இருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அரிவாள் மற்றும் கத்திகளுடன் மர்ம நபர்கள் வெட்டி விட்டு தப்பிய நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடிவந்த நிலையில்,  தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோத்தகிரியில் வைத்து 5 பேரை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது. இதனிடையே கோகுல் உயிரிழந்த நிலையில், இளைஞர் மனோஜ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.