நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெங்கரை பகுதியில் முத்து மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கௌஷிக் என்ற மகனும், நிதர்சனா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துமாணிக்கம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் கபிலர்மலை முருகன் கோவிலுக்கு சென்றார்.

இதனையடுத்து மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பூசாரிபாளையம் பகுதியில் சென்ற போது சாலையின் குறுக்கே நாய் வந்தது. இதனால் முத்துமாணிக்கம் சடன் பிரேக் பிடித்தார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து நவநிதா படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவநிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.