சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி சந்திரா ஓஜா நீச்சலில் புதிய சாதனை படைத்துள்ளார். குளம் ஒன்றில் எட்டு மணி நேரம் இடைவிடாமல் நீந்தி கோல்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கோல்டன் உலக சாதனை புத்தக ஆசிய தலைவர் மனிஷ் பிஷ்னோய் சிறுமியின் சாதனையை உறுதி செய்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தேசிய ஜூனியர் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை அந்த சிறுமி மூன்று தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.