டெல்லி விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் விமான ஊழியர்களை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக விமானிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனே விமானி விமானத்தை அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரை இயக்கினார். அதன் பிறகு ஊழியர்களை தாக்கிய பயணியை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த நபர் மது குடித்திருந்தது தெரிய வந்தது. விமான ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதைத் தொடர்ந்து விமானம் அங்கிருந்து கிளம்பி லண்டனுக்கு சென்றது.