தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குத்தாலம் தாலுகா வடமஞ்சுவாய் பேராவூர் கிராமத்தில் ஜெயக்குமார் – ராசாத்தி  தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் ராசாத்தி அவரது கணவர், மகனுடன் நேற்று திருமணத்திற்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே வழியாக வந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியதில் ராஜாத்தி நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தை ஏற்படுத்திய ட்ராக்டர் நிக்காமல் சென்று விட்டது.

இது குறித்து  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் ராசாத்தி உடலை சாலையில் வைத்து டிராக்டர் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இருப்பினும் மறியல் போராட்டம் கைவிடப்படவில்லை. இதனை தொடர்ந்து டிராக்டர் டிரைவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து ராசாத்தி உடல் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.