சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி பகுதியில் பூ வியாபாரியான கீர்த்திவர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் மகள் இருக்கிறாள். இந்நிலையில் 2-வது முறையாக கர்ப்பமான நிஷாந்தினி பிரசவத்திற்காக வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக நிஷாந்தினியை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

அதன்படி ஆம்புலன்ஸ் மூலம் நிஷாந்தினியை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் பிரசவ வலியால் துடித்த நிஷாந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் நிஷாந்தினி உயிரிழந்ததாக குற்றம் சாட்டினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.