பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாதம் 6, 7, 8-ஆம் தேதிகளில் சூரிய ஒளிக்கதிர் மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வு மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். இந்த ஆண்டு மாசி மாதம் 6-ஆம் தேதியான நேற்று முன்தினம் மாலையிலும், நேற்றும் சூரிய கதிர்கள் மூலவர் மீது விழுந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் பார்த்து சுவாமியை தரிசனம் செய்தனர்.