தஞ்சை உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. ஆனால் இந்த பொருட்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ள சந்தையில் விற்று அதிக லாபம் பெரும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

இவர்கள் குறித்தும் ரேஷன் பொருட்கள் பதுக்கல்  குறித்தும் பொதுமக்கள் 18005995950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் புகார் அளித்தவர்  ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்காக மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் 24 மணி நேரமும் செயல்படும். போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இது கூடுதல் டிஜிபியின் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.