சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியேரி கிராமத்தில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரப்னா(16) அரசு மேல்நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி அதிகாலை ரப்னா தனது அண்ணன் கருப்பையா, அண்ணி ராதா ஆகியோரை மோட்டார் சைக்கிளில் நத்தகரை சுங்க சாவடிக்கு பேருந்தில் ஏற்றி விட சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு ரப்னா திரும்பி வந்துள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ரப்னா தனியார் பால்பண்ணை அருகே சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரப்னா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.