உத்திர பிரதேசத்தின் மிர்சாப்பூர் நகரில் உள்ள கோர்ட் ஒன்றில் தலேவார் சிங் என்பவர் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் கோர்ட் வளாகத்தில் இருந்த நீதிபதிகளுக்கான தன்னுடைய அறையில் இன்று உடைமாற்றிக் கொண்டிருந்தபோது அவரது மேல் அங்கியில் வைத்திருந்த கை துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்துள்ளது. இந்நிலையில் துப்பாக்கி கீழே விழுந்த வேகத்தில் திடீரென சுட்டுள்ளது.  அந்த துப்பாக்கி சுட்டதில் நீதிபதியின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும் கோர்ட் வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் வந்திருந்த மக்கள் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து விவரம் தெரிந்து நீதிபதி அறைக்கு சென்றனர். பின்னர் நீதிபதியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது காலில் இருந்து துப்பாக்கி நீக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஆபத்து நிலையை கடந்துள்ளார். அதனால் இனி பயப்பட வேண்டிய தேவையில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த் பிரஜாதிபதி கூறியதாவது, நீதிபதியின் உரிமம் பெற்ற கைது துப்பாக்கி அவர் உடை  அணியும் போது கீழே விழுந்து அவரது காலில் சுட்டுள்ளது. அந்த துப்பாக்கியின் குண்டை தற்போது மருத்துவர்கள் நீக்கிவிட்டனர். இது குறித்து விசாரணை நடத்த இருக்கின்றோம் என அவர் கூறியுள்ளார்.