தமிழகத்தில் பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு மார்ச் 23ஆம் தேதி இன்று நான்காம் சனிக்கிழமை, மார்ச் 24 சுப முகூர்த்தம், பௌர்ணமி மட்டுமல்லாமல் ஹோலி பண்டிகை என்பதால் அரசு விடுமுறை வழங்கியுள்ளது. இந்த விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்கு பொதுமக்கள் சுற்றுலா தளங்கள், கோவில்கள் அல்லது தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். இதனால் மக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து இன்று 390 பேருந்துகள் இயக்கப்படும். அதே சமயம் கோடை விடுமுறை காலம் முழுவதும் தினசரி 800 பேருந்துகளையும், 364 ஏசி பேருந்துகளையும் 67 ஸ்போர் பேருந்துகளையும், வார விடுமுறை நாட்களில் ஆயிரம் பேருந்துகளையும் இயக்குவதற்கு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.