அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடைவிதித்ததை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மார்ச் 25ல் விசாரணைக்கு வருகிறது. தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார். அதிமுக கொடி, சின்னம் லெட்டர்பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். மேலும் “அதிமுகவின் சின்னம் மற்றும் கொடி பறிக்கப்பட்டது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” என்று ஓபிஎஸ் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.