தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்து வருவதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். சில பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுவது மாணவர்களை மேலும் பாதிப்படைய செய்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், “மாநிலத்தில் கடும் வெயில் காரணமாக கோடை விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது” என அறிவுறுத்தியுள்ளது.