பழனி அருகே கொடைக்கானல் மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்திலிருந்து 20க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.