பொதுவாக காளைகள் கோபத்தில் இருப்பதைப் பற்றிய பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியிருக்கும் நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரின் மனதையும் உருக்கியுள்ளது. இதில், ஒரு சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த பெரியவரிடம், காளை ஒன்று மிகவும் மென்மையாக தனது தலையால் அவரை தள்ளி, வழியை விடுமாறு சமிக்ஞை அளிக்கிறது.

“நீங்க நடுவுல நிற்கிறீங்க, தயவுசெய்து ஒதுங்கிப் போங்க” என சொல்லும் போல் காளையின் நடத்தை இருக்கும் வகையில், இந்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by ghantaa (@ghantaa)

இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் @ghantaa என்ற பக்கத்தில் பகிரப்பட்டு, 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகியுள்ளது. காணொளியில், மூன்று நபர்கள் சாலையோரத்தில் உரையாடிக் கொண்டிருக்க, காளை ஒன்று நிதானமாக வந்ததும், அவர்களில் ஒருவர் முன்னால் நிற்பதைப் பார்த்து மென்மையாக தலையால் நகர்த்தியபடி முன்னே நகர்த்துகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள், “இவ்வளவு பொறுமை, இந்த காளை யாரிடமிருந்து பயிற்சி பெற்றது?”, “இது போல ஒரு கருணை உள்ளம் கொண்ட காளையை இன்று தான் பார்க்கிறேன்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் பலர், “இது தான் நம் இந்தியாவின் கலாசாரம்; விலங்குகளுக்கே கருணை இருக்கிறது” என பாராட்டியுள்ளனர். ஒருவரேனும் “இன்று இந்த காளை தாக்கும் மனநிலையில் இல்லை” என நக்கலாக கருத்து தெரிவித்திருந்தால், மற்றொருவர் “இது நம் சமூகத்தில் மனிதர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்” என எழுதியுள்ளார். மொத்தத்தில், இந்த காளையின் மென்மையான நடத்தை சமூக வலைதள பயனாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.