கொச்சுவேலியில் இருந்து கோரக்பூர் செல்லும் ராப்தி சாகர் அதிவிரைவு ரயில் இன்று தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கேரளாவின் கொச்சுவேலியில் இருந்து உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் இணைப்பு முறையில் இன்று அதாவது பிப்ரவரி 19ஆம் தேதி தாமதமாக வருவதால் காலை 6.35 மணிக்கு புறப்படுவதற்கு பதில் இரவு 7 மணிக்கு புறப்படும். இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.