சென்னை காவல்துறை சார்பாக சிற்பி திட்டத்தில் உள்ள ஐந்தாயிரம் பள்ளி மாணவ மாணவிகள் இயற்கை உடன் இணைந்த கல்வி சுற்றுலாவுக்கு இன்று அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி முகத்திற்கு ரயிலில் மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

பிறகு மாலை 6.30 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் திரும்பும் மாணவர்கள் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று கலந்துரையாடுகின்றார். அதனைத் தொடர்ந்து ஐந்தாயிரம் மாணவ மாணவிகளை கல்வி சுற்றுலாவாக ரயில் மூலம் அழைத்துச் சென்றதற்காக வேர்ல்ட் யூனியன் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர் வழங்கிய உலக சாதனை சான்றிதழ் அமைச்சர் உதயநிதி சென்னை காவல் ஆணையரிடம் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.