ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் இந்த தேர்தல் பிரதமர் மோடியை வெளியேற்றுவதற்கான தேர்தலாக இருக்கும். மேலும் கேஸ் விலை 500 ரூபாய்க்கும், பெட்ரோல் விலை 75 ரூபாய்க்கும், நூறு நாள்வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும் என கூறியிருக்கிறார்கள். இதெல்லாம் நடக்கவேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும் என கூறியுள்ளார்.