இந்தியாவின் தற்போது சிலிண்டர் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. ஆனால் சிலிண்டர் எரிவாயுக்கான 50 லட்சம் ரூபாய் காப்பீடு பற்றி பலருக்கும் தெரியவில்லை. அதாவது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி விபத்து மூலமாக உயிரிழப்பு அல்லது சொத்து இழப்பு ஆகியவை நிகழ்ந்தால் 50 லட்சம் ரூபாய் காப்பீடு பயனாளர்களுக்கு வழங்கப்படும். இதற்காக காப்பீடு தொகை எதையும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டாம். இலவசமாகவே காப்பீடு வழங்கப்படுகின்றது.

இந்த காப்பீட்டு தொகையை பெற சில நிபந்தனைகள் உள்ளன. அதன்படி சிலிண்டர் பைப், ஸ்டவ் மற்றும் ரெகுலேட்டர் ஆகியவை அனைத்தும் ஐஎஸ்ஐ முத்திரை உள்ள நபர்களுக்கு மட்டுமே இந்த இழப்பீடு தொகை வழங்கப்படும். அதனைப் போலவே விபத்து நடந்து 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் தங்களுடைய எல்பிஜி நிறுவனம் மற்றும் காவல் நிலையத்திற்கு விபத்து தொடர்பாக தகவல் தெரிவித்து இருக்க வேண்டும்.

காப்பீடு தொகை குறித்து கோரிக்கை வைக்கும் போது நிறுவனத்திற்கு விபத்துக்கான எஃப் ஐ ஆர் நகல், மருத்துவ ரசீது, மருத்துவமனை பில், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் இறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் சிலிண்டர் யாருடைய பெயரில் உள்ளதோ அவருக்கு மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும். இந்த நிபதனைகளை பூர்த்தி செய்துள்ள நபர்களுக்கு மட்டுமே 50 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.