கேரள மாநிலம் வயநாட்டில் லகிடி ஜவகர் நவோதயா பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிகள் படிக்கும் மாணவர்களுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு ஆலப்புழாவில் உள்ள வைரலாஜி ஆய்வகத்தில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 98 மாணவர்களுக்கு நேரா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த வைரஸ் தொற்று குடிநீர் குழாய் மூலம் பரவியதாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக பள்ளிகளில் உள்ள குடிநீர் குழாய்களில் குளோரினேசன் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.