தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் நயம்புத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் காளியம்மாள். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.இவரது முதல் கணவரான ஜெயபால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த, தன்னைவிடவும் 10 வயது குறைவாக உள்ள ராமச்சந்திரன் (28) என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதனை விரும்பாத ராமச்சந்திரனின் அக்கா கூலிப்படையை ஏவி காளியம்மாள் கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஜெயபால், கவிதா, விஜயலட்சுமி, விவேக் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.