தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் ரூ.1.42 கோடி கணக்கில் வராத ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மக்களவைத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. யானைகவுனி பகுதியில் செயல்பட்ட அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்துள்ள போலீசார், இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.