நான் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறேனா என்பது இன்னும் 3 நாட்களில் தெரியவரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 20ம் தேதிக்குள் கூட்டணி இறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுயேட்சைகள் போட்டியிட முடியாத அளவுக்கு தேர்தல் களம் சூடாகவும், செலவினம் அதிகமானதாகவும் உள்ளது.

பிரதமர் மோடி மார்ச் 18, 19ம் தேதிகளில் தமிழகம் வருகிறார். அதன்பிறகும் வருவார். கன்னியாகுமரி, சென்னை, கொங்கு மற்றும் வட தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் மோடி ஆட்சிதான் வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.