நூற்பாலைகள் நூல் விலையை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது தொழில்துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வால் ஜவுளி தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தவறிவிட்டன என்று குற்றம் சாட்டிய ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் நூல் விலையை உடனே குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.