புதிய மின் இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக பல மடங்கு வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், கூடுதல் கட்டணத்தை சம்பந்தபட்ட மின் நுகர்வோரின் கணக்கில் திருப்பி செலுத்தி, அவர்களின் அடுத்தடுத்த பில் தொகையுடன் அதை இணைத்து சரி செய்து கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.