தமிழகத்தில் நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு ரம்ஜான் இனத்தை முன்னிட்டு ஏப்ரல் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட உள்ளது. தேர்தலை முன்னிட்டு தமிழக பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 15 முதல் 19ஆம் தேதி வரை மூடப்பட உள்ளன. மேலும் ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதி நேரடியாக தேர்வு எழுத மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.