“தாய்மார்களுக்கு ரூபாய் ஆயிரம் பிச்சைப் போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்களா?” என பாஜக சார்பில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு கூறியிருந்தார். இதனை எதிர்த்து திமுக மகளிர் அணி சார்பில் பல்வேறு போராட்டங்க நடத்தப்பட்டன.  இந்நிலையில் தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று டெபாசிட் வாங்கினால் மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்வோமென காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் பேசிய அவர், ‘தமிழகத்தில் பாஜக டெபாசிட் வாங்கும் முயற்சியில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். மகளிர் உரிமைத் தொகையை விமர்சித்த குஷ்பு பிச்சை எடுப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளார். விரைவில் அந்த நிலைமை அவருக்கு வரும்’ என்றார்.