நாட்டின் 2 முக்கிய வங்கிகளின் கிரெடிட் கார்டு (Co-Branded) சேவைகளில் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துக் கொள்ள ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. சௌத் இந்தியன் வங்கி மற்றும் ஃபெடரல் வங்கிகள் அவை. இந்த இரண்டு வங்கிகளும் தடை குறித்து அவர்களுடைய முதலீட்டாளர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளன. ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றும் வரை தடை தொடரும் என்று சொல்லப்பட்டுள்ளது. என்ன விதிமீறல் என்ற தகவல் இல்லை.