சென்னையைச் சேர்ந்த IT நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பம்பர் சலுகையை அறிவித்துள்ளது. கிண்டி தொழிற்பேட்டையில் IT நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நிறுவனத்தில் பணியாற்றும் 38 ஊழியர்களுக்கு 33 சதவீத பங்கை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

நிறுவனம் நிறுவப்பட்டதில் இருந்து பணிபுரியும் 40 பேருக்கு அதில் 5 சதவீதம் கிடைக்கும். மற்றவர்களுக்கு மீதமுள்ள பங்குகள் கிடைக்கும். இது தவிர நேற்று (செவ்வாய்க்கிழமை) 50 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கார்கள் வழங்கப்பட்டன.