தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு நாய் சிறு குழந்தையுடன் விளையாடி பாச மழை பொழிவதை பார்க்க முடிகிறது. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட அக்குழந்தை எந்த விதமான உடல் தொடுதலையும் விரும்பவில்லை என்பது வீடியோவை பார்த்தால் புரிகிறது.

எனினும் அந்த நாய் குழந்தையை தொட்டு தொட்டு அதற்கு ஆறுதல் கூறுவது போன்று நடந்துகொள்கிறது. தன் பாசத்தை அது பல வகைகளில் வெளிப்படுத்துகிறது. மேலும் நாய் அந்த குழந்தையை ஒரு தாயைப் போன்று கவனித்துக்கொள்கிறது. நாய் அக்குழந்தையை மிகுந்த அன்புடனும் அப்பாவித்தனத்துடனும் அரவணைப்பதைக் வீடியோவில் பார்க்க முடிகிறது.