ஒரு மனிதனின் உயிரைப் போராடி மீட்கும் அந்த சில நிமிடங்கள், ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்நாள் நம்பிக்கையைத் தீர்மானிக்கிறது. வீட்டில் குளிப்பதற்காகத் தயாராகி, சட்டையைக் கழட்டிவிட்டுப் பனியனுடன் நின்றிருந்த அந்த நேரத்தில் தான், அந்த அவசர அழைப்பு வருகிறது. “உடனே வர முடியுமா?” என்ற ஒற்றைக் கேள்விக்குப் பதிலளிக்கக் கூட அவர் நேரம் ஒதுக்கவில்லை.
போட்டிருந்த பனியனுடனேயே ஆம்புலன்ஸ் நோக்கிப் பதறியடித்து ஓடுகிறார். அந்தத் தருணத்தில் தனது தோற்றம் எப்படியிருக்கும், ஊர் உலகம் என்ன நினைக்கும் என்ற எந்தச் சிந்தனையுமின்றி, ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே அவரிடம் இருந்தது.
மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸை இயக்கி, சரியான நேரத்தில் நோயாளிக்குச் சிகிச்சை கிடைக்கச் செய்த அந்த ஆம்புலன்ஸ் டிரைவரின் செயல் இப்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளியைப் பார்த்து, “இவர் வெறும் டிரைவர் அல்ல, ஒரு உயிரைக் காத்த கடவுள்” என நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அண்ணா.. உடனே வறீங்களா… குளிக்க சென்ற போது வந்த Phone Call..! பனியனுடன் ஓடிய Ambulance Driver#ambulance #ambulancedriver #dinakarannews https://t.co/gewp5Qx9P0 pic.twitter.com/ydEWKVBQsT
— Dinakaran (@DinakaranNews) March 28, 2026
நேரத்தின் மதிப்பையும், தொழிலின் மீது அவர் கொண்டுள்ள மாறாத பக்தியையும் பாராட்டிப் பலரும் இந்தப் பதிவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி
