மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா சமீபத்தில் பீகார் மாநிலத்துக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, பீகாரில் ராம நவமியன்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹூவா மொய்த்ரா தன் டுவிட்டர் பதிவில், “பீகாரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா மிரட்டி இருக்கிறார்.

குஜராத்தில் கொலையாளிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதை உறுதிசெய்த அமித்ஷா, அவர்களுக்கு லட்டு ஊட்டி விடுகிறார். குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேர் விடுவிக்கப்பட்டனர்” என அவர் விமர்சித்துள்ளார்.