தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி இருந்து வந்தது. தினமும் பணி நிமித்தமாக வாகனங்களில் பல்வேறு கி.மீ பயணிக்கக்கூடிய வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் விலையில் மிகுந்த பாதிப்பை அடைகின்றனர். இதன் காரணமாக  மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் என பலமுறை கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னையில் நயாரா நிறுவனத்தில் பெட்ரோல் நிலையங்களில் ஐ.ஓ.சி பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மற்ற பெட்ரோல் நிலையங்களை விட இன்று பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.1 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.