அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சமீபத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை மூட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட உள்ளதாகவும் அரசு  தெரிவித்திருந்தது. இதனையடுத்து பஇதற்கு ல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது.

இதனையடுத்து அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யூகேஜி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மொத்தமுள்ள 2,381 அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகளில் 40,000 பேர் சேர்ந்துள்ளனர். மேலும் 20,000 மாணவர்கள் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.