குரூப் 4 பணிக்கு கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் காலியாக இருந்த 135 சமையலர் பணியிடங்கள் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் குரூப் 4 பணியிடங்களில் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்யத் தேவையான விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.